நாதக பிரமுகர் கொலைக்கான காரணம் என்ன? - 4 பேரை கைது செய்து போலீஸ் விளக்கம்

NTK Balamurugan Murder Case : பாலமுருகன் கொலையானது இரு தரப்பினருக்கு இடையே சொத்தை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் நடைபெற்றது என விளக்கம் அளித்துள்ளது.

Jul 16, 2024 - 21:59
Jul 18, 2024 - 10:43
 0
நாதக பிரமுகர் கொலைக்கான காரணம் என்ன? - 4 பேரை கைது செய்து போலீஸ் விளக்கம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலையில் போலீஸ் தரப்பில் விளக்கம்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கில், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு 4 குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்துள்ளதோடு, கொலைக்கான காரணம் என்ன என்பதையும் தெரிவித்துள்ளனர்.

NTK Balamurugan Murder Case : மதுரை மாநகர் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நாம் தமிழர் கட்சியில் மதுரை மாநகர் வடக்கு தொகுதி துணைச் துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். பாலமுருகன் இன்று காலை வழக்கம் போல் வாக்கிங் சென்றபோது அவரைப் பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் மதுரை வல்லபாய் சாலையில் அமைந்துள்ள தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே கொலை செய்ய விரட்ட தொடங்கியுள்ளது.

உயிரைக் காப்பாற்ற பாலமுருகன் ஓட தொடங்கிய நிலையில் வழி மறித்த அக்கும்பல் பாலமுருகனை கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினருக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் உயிரிழந்த பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாலசுப்ரமணியன் எதற்காக கொல்லப்பட்டார்.? முன்விரோதமா.? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, “இன்று (16.072024) காலை 07.00 மணி அளவில் மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லபாய் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த செல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் (50) த.பெ. சிதம்பரம் என்பவரை நான்கு நபர்கள் கொலை செய்தது சம்பந்தமாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வழக்கின் முதற்கட்ட விசாரணையில், மகாலிங்கம் என்பவருக்கும் அவரது தம்பி மருமகன் பாண்டியராஜன் என்பவருக்கும் சொத்துப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பாண்டியராஜனுக்கு ஆதரவாக இறந்து போன அவரது சகோதரர் பாலமுருகன் மேற்படி சொத்தினை சமமாக பிரித்து தருமாறு கேட்டு மகாலிங்கத்திடம் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இப்பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணும் விதமாக பாண்டியராஜனின் மகள் பிரியா என்பவரை மகாலிங்கத்தின் மகன் அழகுவிஜய் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். திருமணமான பிரியா மற்றும் அழகுவிஜய் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியா, தனது தந்தை பாண்டியராஜன் வீட்டில் இருந்து கொண்டு அழகுவிஜய் மீது நீதிமன்றத்தில் பராமரிப்பு வழக்கும், விவாகரத்து வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 2024-ல் பாண்டியராஜன், மகாலிங்கத்திடம் தனது மகளுக்கு சேர வேண்டிய சொத்தினை பிரித்து தருமாறு கேட்ட போது, ஏற்ப்பட்ட பிரச்சனை தொடர்பாக பாண்டியராஜனின் புகாரின்படி மகாலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு. நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பாண்டியராஜனின் மகள் பிரியா, அவரது கணவர் அழகுவிழுய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மகாலிங்கம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் பாண்டியராஜன் தனது சகோதரர் பாலமுருகனை வைத்து, ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

எனவே பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் தன்னை தாக்குவதற்கு முன்பாக அவரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்த மகாலிங்கம் மற்றும் அவரது மகன் அழகுவிஜய் அவர்களிடம் லோடு மேன்களாக வேலை செய்து வரும் (1) பரத் (2) நாக இருள்வேல் (3) கோகுலகண்ணன் மற்றும் (4) பென்னி ஆகியோருடன் சேர்ந்து சரித்திரப்பதிவேடு குற்றவாளியான பாலமுருகனை கொலை செய்துள்ளனர்.

பாலமுருகனை கொலை செய்த அனைத்து எதிரிகளும் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையானது இருதரப்பினருக்குமிடையே திருமண உறவினால் ஏற்பட்ட பிரச்சனையாலும், அவர்களுக்கிடையே சொத்தை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையாலும் நடைபெற்றதாகும். வழக்கானது புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow