Coolie: ரஜினியின் கூலி படத்தில் மேலும் ஒரு கன்னட பிரபலம்... ரூட் மாறும் லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் விசாகப்பட்டிணத்தில் தொடங்கியது. இதில் மேலும் ஒரு கன்னட திரை பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aug 26, 2024 - 16:50
 0
Coolie: ரஜினியின் கூலி படத்தில் மேலும் ஒரு கன்னட பிரபலம்... ரூட் மாறும் லோகேஷ் கனகராஜ்!
ரஜினியின் கூலி படத்தில் இணைந்த ரச்சிதா ரம்

சென்னை: வேட்டையனை தொடர்ந்து கூலி படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தசெ ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதனிடையே நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ‘கலைஞர் என்னும் தாய் நூல்” வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் அமைச்சர் துரை முருகன் குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதாவது, திமுகவில் சில சீனியர்கள் இருக்கிறார்கள், அவர்கள் இளைஞர்களுக்கு வழிவிடாமல் இப்போதும் அதே இடத்தில் இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் ஃபெயில் ஆகி அதே இடத்தில் இல்லை, எல்லோருமே அசாத்தியமான சீனியர்கள் எனக் கூறியிருந்தார். முக்கியமாக அமைச்சர் துரைமுருகன், கலைஞர் கண்களிலேயே விரல் விட்டு ஆட்டியவர் என நகைச்சுவையாக பேசியிருந்தார். இதற்கு அமைச்சர் துரை முருகனும் நகைச்சுவையாக பதிலடி கொடுத்திருந்தார். அதாவது சினிமாவில் சில மூத்த நடிகர்கள் பல் விழுந்து, தாடி நரைத்த பின்னரும் தொடர்ந்து நடித்து வருவதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். 

இதனையடுத்து கூலி படப்பிடிப்புக்காக விசாகப்பட்டிணம் புறப்பட்ட ரஜினிகாந்த், அதற்காக சென்னை விமான நிலையம் சென்றிருந்தார். அப்போது துரைமுருகனின் பதிலடி குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரொம்பவே கூலாக பதில் சொன்ன ரஜினிகாந்த், அமைச்சர் துரை முருகன் எனது நண்பர், எங்களது நட்பு எப்போதும் போல் தொடரும் என கூறிவிட்டுச் சென்றார். அதேவேகத்தில் நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம் என துரை முருகனும் பேட்டி கொடுத்திருந்தார். இந்த பரபரப்புகளை கண்டுகொள்ளாத ரஜினி, விசாகப்பட்டிணத்தில் நடைபெறும் கூலி படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டாராம்.  

மேலும் படிக்க - மாரி செல்வராஜ்ஜின் வாழை மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானதை தொடர்ந்து, கூலி படப்பிடிப்பை தொடங்கினார் லோகேஷ். முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் ஸ்ருதிஹாசனும் பங்கேற்ற நிலையில், தற்போது செகண்ட் ஷெட்யூல் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. விசாகப்பட்டிணத்தில் நடைபெறும் இந்தப் படப்பிடிப்பில், ரஜினியுடன் கன்னட நடிகை ரச்சிதா ராம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கன்னட ஹீரோ உபேந்திராவும் ரஜினியின் கூலி படத்தில் கமிட்டாகியுள்ளார். 

இவரைத் தொடர்ந்து தற்போது ரச்சிதா ராமும் கூலி படத்தில் ரஜினியுடன் நடிப்பது உறுதியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ்ஜின் படங்கள் பெரும்பாலும் மல்டி ஸ்டார்ஸ் ஜானரில் இருக்கும். கோலிவுட்டுக்கு அடுத்தபடியாக மல்லுவுட்டில் இருந்து நடிகர்களையும் நடிகைகளையும் செலக்ட் செய்வார் லோகேஷ். ஆனால், கூலி படத்தில் தொடர்ந்து கன்னட பிரபலங்கள் கமிட்டாகி வருவது ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கன்னடத்தில் இருந்து நடிகர்களை தேர்வு செய்வது லோகேஷ் கனகராஜ்ஜா அல்லது ரஜினியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், கூலி படப்பிடிப்பை இந்தாண்டு இறுதிக்குள் முடித்துவிட வேண்டும் என லோகேஷ் கனகராஜ் பிளான் செய்துள்ளாராம். அதன்பின்னரே ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் ஆகும் என சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow