Coolie Movie Update : கூலி படத்தில் இணைந்த அடுத்த பான் இந்தியா ஸ்டார்... ரஜினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த லோகேஷ்!

Kannada Actor Upendra Join with Rajinikanth in Coolie Movie : லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் பான் இந்தியா ஹீரோ ஒருவரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Aug 24, 2024 - 11:15
Aug 24, 2024 - 14:01
 0
Coolie Movie Update : கூலி படத்தில் இணைந்த அடுத்த பான் இந்தியா ஸ்டார்... ரஜினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த லோகேஷ்!
ரஜினியின் கூலி படத்தில் இணையும் உபேந்திரா

Kannada Actor Upendra Join with Rajinikanth in Coolie Movie : சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் குறித்த டைட்டில் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதன்பின்னர் தொடங்கிய கூலி படப்பிடிப்பில் ரஜினியும் ஸ்ருதிஹாசனும் பங்கேற்றிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட ஸ்ருதிஹாசன், அதனை ஒருசில நிமிடங்களிலேயே டெலிட் செய்துவிட்டார்.  

இந்நிலையில், கூலி படத்தில் கன்னட ஹீரோ ஒருவரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஸ்ருதிஹாசன், சத்யராஜ் இருவரும் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், மலையாள நடிகர் செளபின் சாஹிரும், டோலிவுட்டில் இருந்து நாகர்ஜுனாவும் கூலி படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இன்னும் அபிஸியலாக அப்டேட் வெளியாகாத நிலையில், தற்போது உபேந்திராவும் கூலி படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. கன்னடத்தில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் உபேந்திரா ரஜினியின் நண்பரும் கூட.

 இதனால் உபேந்திராவையும் கூலி படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதன்படி தற்போது கூலி படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ள உபேந்திராவுக்கு மிக முக்கியமான ரோல் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை (ஆக.25) ஐதராபாத்தில் தொடங்கும் கூலி படப்பிடிப்பில் ரஜினியுடன் கன்னட நடிகர் உபேந்திராவும் பங்கேற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஐதரபாத்தில் உள்ள ஹார்பரில் நடைபெறும் இந்தப் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க - மாரி செல்வராஜ்ஜின் வாழை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

கூலி படப்பிடிப்பை இந்தாண்டு இறுதிக்குள் முடித்துவிட வேண்டும் என லோகேஷ் கனகராஜ் பிளான் செய்துள்ளாராம். அதேபோல் அடுத்தாண்டு பொங்கல் அல்லது சம்மர் ஸ்பெஷலாக கூலி படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுபற்றிய அப்டேட் கூலி படப்பிடிப்பு முடிந்த பின்னரே வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், கூலி ரிலீஸானதும் உடனே கைதி 2ம் பாகத்தை தொடங்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதற்காக கார்த்தியும் கால்ஷீட்டுடன் ரெடியாக இருக்கிறார். 

லியோ வெளியானதும் கைதி 2ம் பாகத்தை இயக்குவது தான் லோகேஷ் கனகராஜ்ஜின் பிளானா இருந்தது. ஆனால், ரஜினியிடன் கூலி படத்தில் கமிட்டானதால், கைதி 2ம் பாகத்தை ஒத்தி வைத்தார் லோகேஷ். இப்போது கூலி ஷூட்டிங் வேகமெடுத்துள்ளதால், சீக்கிரமே கைதி 2ம் பாகத்துக்கும் விடிவு காலம் பிறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow