Rajinikanth: திரையுலகில் ரஜினியின் 50-வது ஆண்டு... ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு தரமான இரண்டு ட்ரீட் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sep 13, 2024 - 21:57
 0
Rajinikanth: திரையுலகில் ரஜினியின் 50-வது ஆண்டு... ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்!
Rajinikanth

சென்னை: கே பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறிய ரஜினி, பின்னர் தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே மாற்றினார். அபூர்வ ராகங்கள் வெளியான 1975ல் தொடங்கிய ரஜினியின் திரைப் பயணம், விரைவில் 50வது ஆண்டு என்ற மைல் கல்லை எட்டவுள்ளது. ஆம்! அதன்படி 2025ல் ரஜினி தனது 50 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனால் அடுத்தாண்டு ரஜினி ரசிகர்களுக்கு தரமான விருந்து ரெடியாகி வருகிறதாம்.

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தசெ ஞானவேல் இயக்கியுள்ள இத்திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வேட்டையனைத் தொடர்ந்து கூலி படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் ரஜினி. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் சாஹிர், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலர் கூலி படத்தில் நடித்து வருகின்றனர்.

கூலி ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வந்தாலும், இந்தப் படத்தை அடுத்தாண்டு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். பொங்கல் ரேஸில் அஜித்தின் விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் திரைப்படமும் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால் கூலி படத்தை ரஜினிக்கு சென்டிமென்ட்டலாக ஒர்க்அவுட் ஆகும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்து வருகிறதாம். 

இதுஒருபக்கம் இருக்க, அதே வேகத்தில் ஜெயிலர் 2ம் பாகமும் அடுத்தாண்டே ரிலீஸாகிவிடும் எனக் கூறப்படுகிறது. கூலி படத்தில் ரஜினியின் காட்சிகளை முதலில் ஷூட் செய்து வருகிறாராம் லோகேஷ். அதனால் இந்தாண்டு இறுதிக்குள் கூலி படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஜெயிலர் 2 படத்திற்கு கால்ஷீட் கொடுக்க ரெடியாகிவிட்டராம் சூப்பர் ஸ்டார். முக்கியமாக கூலி, ஜெயிலர் 2 என இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரித்து வருகிறது. அதனால் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் அடுத்தடுத்து நடைபெறவுள்ளது.

இதனால் ரஜினியின் 50வது ஆண்டு கொண்டாட்டமாக கூலி, ஜெயிலர் 2 என இரண்டு படங்களையும், 2025ல் ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் பிளான் செய்து வருகிறது. நிஜமாகவே இது ரஜினி ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி – நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. அடுத்தாண்டு கூலி, ஜெயிலர் 2 படங்கள் வெளியானால், ஒரே ஆண்டில் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்துவிடுவார் ரஜினிகாந்த். இந்த சம்பவத்திற்காக சன் பிக்சர்ஸ் தாறுமாறாக ரெடியாகி வருகிறதாம்.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow