பாலியல் தொந்தரவு.. தாலி கயிற்றால் இறுக்கி 3வது கணவரை கொலை செய்த மனைவி..

3ஆவது கணவரை தாலிக் கயிற்றால் இறுக்கி மனைவி கொலை செய்ததோடு, சிகிச்சைக்காக மருத்துவமனையின் அனுமதித்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.

Aug 21, 2024 - 09:28
Aug 21, 2024 - 09:32
 0
பாலியல் தொந்தரவு.. தாலி கயிற்றால் இறுக்கி 3வது கணவரை கொலை செய்த மனைவி..
கொலை செய்யப்பட்ட கணவர் மணிவண்ணன்

சென்னை திருவல்லிக்கேணி அசுதீன்கான் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (28). கூலி தொழிலாளியான இவர், திருவல்லிக்கேணி பல்லவன் சாலையை சேர்ந்த நாகம்மாள் (35) என்பவரை திருமணம் செய்து கொண்டு 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். நாகம்மாளுக்கு மணிவண்ணன் 3-வது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று இரவு மணிவண்ணனும், நாகம்மாளும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இருவருக்குள்ளும் பாலியல் உறவு காரணமாக சண்டை நடப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே, நேற்று இரவும் சண்டை நடந்ததாக தெரிகிறது. 

அப்போது மணிவண்ணன் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததால் நாகம்மாள் தனது தாலி கயிற்றால் மணிவண்ணனை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். மணிவண்ணன் இறந்து போனதால் அதிர்ச்சியடைந்த நாகம்மாள் என்ன செய்வதென்று தெரியாமல் பயந்ததாக கூறப்படுகிறது. பிறகு தனது சகோதரி அபிராமி மற்றும் அவரது கணவர் நந்தகுமார் ஆகியோரை வரவழைத்து யாருக்கும் தெரியாமல் இரவிலேயே ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி மருத்துவர்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் மணிவண்ணன் கழுத்தில் இருந்த காயத்தை கண்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடனே திருவல்லிகேணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நாகம்மாளை பிடித்து விசாரித்தபோது கணவர் மணிவண்ணனை கொலை செய்ததாக நாகம்மாள் ஒத்துக்கொண்டார்.

பிறகு திருவல்லிக்கேணி போலீசார் நாகம்மாளை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையை மறைக்க முயன்றதாக அவரது சகோதரி அபிராமி, கணவர் நந்தகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலை நடந்த இடத்திற்கு சென்று தடயவியல் நிபுணர்களுடன் சேர்ந்து போலீசார் தடயங்களை சேகரித்துள்ளனர். மணிவண்ணன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் வைக்கப்ட்டுள்ளது. கணவரை தாலி கயிற்றால் இறுக்கி மனைவியே கொலை செய்த சம்பவம் அதே பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow