தவெக கொடி.. என்னதான்பா அர்த்தம்?? ஏமாற்றத்தில் தொண்டர்கள்

கட்சிக்கொடி அறிமுக விழாவில் கொடி அமைப்பிற்கான அர்த்தத்தை கூட தெரிவிக்காமல் அதனை மாநாட்டு மேடையில் விளக்க இருப்பதாக தெரிவித்து விஜய் உரையை முடித்தது வந்திருந்த தொண்டர்களை பெறும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியதை உணர முடிந்தது

Aug 22, 2024 - 10:34
Aug 22, 2024 - 11:04
 0
தவெக கொடி.. என்னதான்பா அர்த்தம்?? ஏமாற்றத்தில் தொண்டர்கள்

தவெக கட்சிக்கொடி அறிமுக விழாவில் கொடி அமைப்பிற்கான அர்த்தத்தை கூட தெரிவிக்காமல் அதனை மாநாட்டு மேடையில் விளக்க இருப்பதாக தெரிவித்து நடிகர் விஜய் உரையை முடித்தது வந்திருந்த தொண்டர்களை பெறும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக கட்சியின் உறுப்பினர்களின் சேர்க்கையை ஆன்லைன் மூலம் தீவிரப்படுத்தினார். கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சியின் கொடி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது தொண்டர்கள் மத்தியில் அதிகமானது. 

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை தனது தாய் தந்தை முன்னிலையில் வெளியிட்டார் விஜய். வாகை பூ, யானை, என வெற்றியை பிரதிபலிக்கும் விதமாகவே இருக்கிறது கட்சியின் கொடி. மேலும், தமன் இசையில் வெளியான தவெகவின் பாடலில், ”இது ஆளபோற தமிழன் கொடி” போன்ற மாஸ் வரிகள் இருந்தது. இதனயடுத்து தவெக கட்சியின் உறுதிமொழியை ஏற்றார் விஜய். அந்த உறுதிமொழியில், ”நமது நாட்டின் விடுதலைக்காகவும். நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்.” என குறிபிடப்பட்டிருந்தது.  சமூக நீதி, சமத்துவம் என்ற வார்த்தைகள் உறுதிமொழியில் இடைபெற்றதால், இந்தியா கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்ததுள்ளது.  

மேலும் படிக்க: மொழிப்போர் தியாகிகளை கையில் எடுத்த விஜய்.. திமுக, சீமானை ஓவர்டேக் செய்வாரா?..

இதனையடுத்து அவர் ஆற்றிய உரையில், ”உங்களுடைய இல்லத்திலும், உள்ளத்திலும் தவெகவின் கொடி இருக்கும் என எனக்கு தெரியும். வெற்றி நிச்சயம்” எனக் கூறினார். கட்சிக்கொடி அறிமுக விழாவில் கொடி அமைப்பிற்கான அர்த்தத்தை கூட தெரிவிக்காமல் அதனை மாநாட்டு மேடையில் விளக்க இருப்பதாக தெரிவித்து விஜய் உரையை முடித்தது வந்திருந்த தொண்டர்களை பெறும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow