ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு.. ரகசியமாக கையிலெடுத்த காவல்துறை...

Arcot Suresh Case vs Armstrong Murder Case : பாம் சரவணனின் சகோதரரும், ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான தென்னரசு என்பவரை குடும்பத்தினர் கண் எதிரே ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது.

Jul 18, 2024 - 16:34
Jul 19, 2024 - 10:05
 0
ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு.. ரகசியமாக கையிலெடுத்த காவல்துறை...
ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பொன்னை பாலுவின் சகோதரர் வாக்குமூலத்தின் படி அவரது சகோதரர் ஆற்காடு சுரேஷ் கொலையை காவல் துறையினர் கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Arcot Suresh Case vs Armstrong Murder Case : பெரம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே படுகொலை (Armstrong Murder) செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை என மொத்தம் 11 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக 11 நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். ஆற்காடு சுரேஷ் கொலைப் பின்ணணியில் ஆம்ஸ்ட்ராங்கின் பெயர் சொல்லப்படுவதற்கு காவல்துறை தரப்பில் தென்னரசு கொலையை சுட்டிக் காட்டி கூறுகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் பாம் சரவணனின் சகோதரருமான தென்னரசு என்பவரைக் கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே வைத்து அவரது குடும்பத்தினர் கண் எதிரே ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது. அந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக இருந்தது தற்போது என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் தான்.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் வைத்து தென்னரசு கொலைக்கு ஒரு கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் தான் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ஜெயபால் தலைமையிலான இந்த கூலிப்படைக்கு ஆம்ஸ்ட்ராங்தான் நிதியுதவி அளித்தாகவும் கொலையாளிகள் தங்குவதற்கு இடமளித்ததாகவும் ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் நம்பி வந்தனர்.

ஆனால், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை விசாரித்த பட்டினப்பாக்கம் போலீசார் ஏற்கனவே நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் தொடர்பு இருப்பதாக எந்தவித விசாரணை அறிக்கையையும் வழங்கவில்லை. எனினும் ஆம்ஸ்ட்ராங் வழக்கின் கொலையாளிகள் வாக்குமூலம் கொடுத்ததைத் தொடர்ந்து, உண்மையை அறிய, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை மீண்டும் விசாரித்து முறையாக அறிக்கை தர வேண்டும் என தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கின் தொடர்பு உள்ளதா? என விசாரிக்க ஏற்கனவே சேகரிக்கப்பட்ட குற்றவாளிகள் கால் ரெக்கார்டு உள்ளிட்ட அறிவியல் ரீதியான தடயங்களை மீண்டும் ஆய்வு செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி மற்றும் அப்போது பணியில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்களை மற்றும் காவலர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக பின்னர் ஜெயபால் தலைமையிலான கூலிப்படை சேர்ந்தவர்களை சிறை சென்று விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டு பணிகள் ரகசிய முறையில் நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow