70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள்... இளைஞர்களை சீரழித்தது திமுக தான்... அன்புமணி ராமதாஸ் அட்டாக்!

PM Anbumani Ramadoss Condemns TN Govt : ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Jul 30, 2024 - 18:44
Jul 31, 2024 - 10:43
 0
70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள்... இளைஞர்களை சீரழித்தது திமுக தான்... அன்புமணி ராமதாஸ் அட்டாக்!
அன்புமணி ராமதாஸ் - முதலமைச்சர் ஸ்டாலின்

PM Anbumani Ramadoss Condemns TN Govt : கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகின்றன. கைதாகியுள்ள மூன்று பேருக்கும் போதைப் பொருட்கள் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், கைதான இப்ராஹிம் என்பவர், ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி இப்ராஹிம் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், தொடரும் போதைப்பொருள் கடத்தலும், திமுகவின் தொடர்பும் என குறிப்பிட்டு, சென்னையிலிருந்து இராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ. 70 கோடி மதிப்புள்ள மொத்தம் 6.93 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணைத் தலைவர் செய்யது இப்ராகிம் உள்ளிட்ட மூவரை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருக்கின்றனர். 

போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய செய்யது இப்ராகிம் திமுகவைச் சேர்ந்தவர் தான் என்பதை அக்கட்சியின் தலைமையும் ஒப்புக்கொண்டு, அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக  நீக்கியுள்ளது.  போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது திமுக நிர்வாகி செய்யது இப்ராகிம். இதற்கு முன் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட போது, அவரது பின்னணியை ஆய்வு செய்தா கட்சியில் சேர்க்க முடியும்? என்று திமுக வினா எழுப்பியது.  இப்போது செய்யது இப்ராகிம் என்ற இன்னொரு திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து திமுக என்ன சொல்லப் போகிறது? 

ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட பிறகும் திமுக நிர்வாகிகளின் சட்டவிரோத செயல்களை திமுக தலைமையும், ஆட்சித் தலைமையும் அனுமதித்திருக்கிறது என்பது தான் இதன் பொருள். தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரத்தை பரப்பி அனைத்து வகை சீரழிவையும் ஏற்படுத்தியவர்களுக்கு திமுக அடைக்கலம் கொடுத்திருக்கிறது. போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட நிர்வாகி கைது செய்யப்பட்ட பிறகு, அவரை நீக்குவதன் மூலமாக மட்டும் இதிலிருந்து திமுக தப்பித்துக்கொள்ள முடியாது. போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக விளக்கம் அளிக்க வேண்டும்.  

இராஜாஜி, ஓமந்துரார், காமராசர், அண்ணா ஆகியோர் கடைபிடித்த கொள்கைகளால் மது என்றால் என்னவென்றே தெரியாத தலைமுறை ஒன்று தமிழ்நாட்டில் உருவானது. ஆனால், மதுவிலக்கை திமுக அரசு ரத்து செய்ததால் 3 தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துவிட்டன. இப்போது போதைப்பொருள் என்ற பெரும் தீமை தமிழ்நாட்டில் பரவுவதற்கு திமுகவினரே காரணமாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் இருந்தும் அதைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தான் குற்றவாளிகளை பிடித்திருக்கிறது. 

மேலும் படிக்க - சென்னையில் 70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தல்

முதலமைச்சர் ஸ்டாலின் இனியாவது விழித்துக் கொண்டு போதைப்பொருட்கள் கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என்று தமிழ்நாட்டு வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவாகும் நிலை உருவாகும் என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow