மூதாட்டி துண்டு துண்டாக வெட்டிக் கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..

மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று உடலை அடையாற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

Jul 28, 2024 - 12:14
Jul 29, 2024 - 10:20
 0
மூதாட்டி துண்டு துண்டாக வெட்டிக் கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..
கொலை செய்யப்பட்ட மூதாட்டி விஜயா

சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி விஜயா. இவர் கட்டிட வேலை, ஓட்டலில்  வேலை செய்து வருபவர். கடந்த 17ஆம் தேதி விஜயா வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மகள் லோகநாயகி பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதையடுத்து 19ஆம் தேதி லோகநாயகி தனது தாயார் விஜயாவை காணவில்லை என எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், "கடந்த 17 ஆம்தேதி  வீட்டில் இல்லை நானும் வேலைக்கு சென்று விட்டேன். பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயார் விஜயாவை காணவில்லை.  ஓட்டல் வேலைக்கு அவர் சென்று விட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வீட்டை விட்டு சென்ற போது, அவர் வெள்ளை நிற புடவை, கழுத்தில் பால்நிறமணி மற்றும் ஒரு சவரன் கம்மல் காதில் போட்டு இருந்தார். அவர் சுறுக்கு பையில் பணம் மற்றும் ஒரு சவரன் தங்க நகை வைத்திருந்தார். சிவப்பு நிரம் ஜாக்கட் போட்டு இருந்தார்" என்று புகாரில் லோகநாயகி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து எம்ஜிஆர் போலீசார் காணவில்லை என வழக்குப்பதிவு செய்து விஜயா தேடினர். இந்த நிலையில் விஜயாவின் வீட்டின் அருகில் வசித்து வந்த பார்த்திபன் என்பவரை விசாரணைக்கு வரும்படி போலீசார் கடந்த 23ஆம் தேதி அழைத்துள்ளனர். ஆனால் பார்த்திபனோ தனது மனைவி சங்கீதாவோடு சேர்ந்து வீட்டை காலி செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். 

சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது செல்போன் டவர் சிக்னலை வைத்து தேடினர். விருதுநகர் பகுதியில் பதுங்கி இருந்தது தெரிந்தது. இதன் பிறகு விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் உதவியோடு  பார்த்திபன்- சங்கீதா தம்பதியை கைது செய்தனர். இது குறித்து எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தி.நகர் காவல் துணை ஆணையரின் தனிப்படை போலீசார் விருதுநகருக்கு விரைந்துள்ளனர். 

மூதாட்டி விஜயாவை கணவன் - மனைவியான பார்த்திபன், சங்கீதா துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துவிட்டு உடலை மூட்டை கட்டி பைக்கில் அடையாற்றில் வீசியுள்ளனர். அவர் அணிந்து இருந்த தங்க நகைகளை திருடி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து, உடலை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் இன்று உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உடல் அனுமதித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைக்கான காரணத்தை தெரிவித்துள்ளர். அதில், இறந்த மூதாட்டி விஜயாவின் மகளான லோகநாயகிவிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, பார்த்திபன், சங்கீதா இருவரும் 20,000 ரூபாய் கடனாக பெற்று இருந்து வந்த நிலையில், மனுதாரர் கடனை திருப்பி கொடுக்கும்படி அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனையடுத்து இருவரும் இரண்டு நாட்களில் திருப்பித் தருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி மூதாட்டி விஜயா, தனது இடுப்பில் சுருக்கு பையில் பணம் வைத்திருந்ததை சங்கீதா பார்த்துள்ளார். 17ஆம் தேதி மூதாட்டி விஜயா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது சங்கீதா என்பவர், மூதாட்டி விஜயாவிடம் பேச்சு கொடுப்பது போல் அவரது வீட்டிற்குள் சென்று இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுருக்குப்பையை பிடுங்கியுள்ளார்.

அப்போது, மூதாட்டி விஜயா சத்தம் போட்டதால் அருகில் கீழே கிடந்த இரும்பு கம்பியால் மார்பில் தாக்கியதில், கீழே கிடந்தவரை, பார்த்திபன் உள்ளே வந்து பார்த்தபோது மயங்கி நிலையில் கிடந்துள்ளனர். இதனையடுத்து, இருவரும் அருகில் இருந்த தங்களது வீட்டிற்குள் உடலை எடுத்துக் கொண்டு சென்று, கடந்த 18ஆம் தேதி மூதாட்டியின் உடலை சாக்கு பையில் கட்டியுள்ளனர். பின்னர், உடலை பார்த்திபன் இருசக்கர வாகனத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்துச் சென்று சைதாப்பேட்டை கழிவுநீர் கால்வாயில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow