ஆள விடுங்கப்பா... சத்தியமா இனி அப்படி நடிக்கவே மாட்டேன்... நமீதா ஓட்டம்!

“100% கவர்ச்சியான வேடங்களில் நான் நடிக்கவே மாட்டேன்” என நடிகை நமிதா ஆணித்தனமாகக் கூறியுள்ளார்.

Aug 8, 2024 - 12:46
Aug 9, 2024 - 09:55
 0
ஆள விடுங்கப்பா... சத்தியமா இனி அப்படி நடிக்கவே மாட்டேன்... நமீதா ஓட்டம்!
கவர்ச்சியான வேடங்களில் நான் நடிக்கவே மாட்டேன்

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் தனியார் நகைக்கடை ஒன்றை திறந்துவைப்பதற்காக பிரபல நடிகை நமிதா வருகை தந்திருந்தார். செண்டை மேளங்கள் வைத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் அப்பகுதியில் கூடியிருந்தனர். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்று மிகவும் முக்கியமான மற்றும் நல்ல நாள். ஏதாவது புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நாளில் தொடங்கினால் மிகவும் ராசியாக இருக்கும். இரட்டை குழந்தைகள் பிறந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது மீண்டும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். அடுத்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இன்னொரு படத்தில் ஆரம்பக் காலத்தில் நடித்தது போல் கிளாமராக, கவர்ச்சியாக நடிக்கக் கூறினார்கள். அதை நான் மறுத்து விட்டேன். தொடர்ந்து சின்னத்திரை மற்றும் வெப் சீரிஸ்களில் என்னை நீங்கள் பார்ப்பீர்கள்” என மகிழ்ச்சி தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “நான் வேலைக்கு வந்து விட்டால் என் கணவன் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளேன். அதனால் எனக்கு நிறைய உதவிகள் வீட்டிலேயே தேவைப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களை என் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக நான் ஒப்படைத்து விட்டேன். தொடர்ந்து மீண்டும் நடிக்க உள்ளேன். 100% கவர்ச்சியான வேடங்களில் நான் நடிக்க மாட்டேன்” என நங்கூரத்தை போட்டத்துபோல் நச்சென்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஃபஹத் பாசில் சொத்து மதிப்பு எத்தனை கோடின்னு தெரியுமா..?

மேலும், “நான் ஒரு தாயாக இருப்பதை மிக மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் ஏற்றுக் கொள்கிறேன். அதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஒரு குழந்தையிடம் தாய் தாயாகதான் இருப்பார்கள். நான் அவர்களை சுத்தம் செய்ய வேலையாட்களை எதிர்பார்ப்பதில்லை. உடனடியாக நானே செய்கிறேன். அங்கு நான் ஒரு பிரபலம் என்பதை அடையாளப்படுத்த முடியாது. ஒரு தாய் நிச்சயமாக தாயாகதான் இருக்க முடியும். ஒரு குழந்தை வலது புறமாக ஓடும் ஒரு குழந்தை இடது புறமாக ஓடும். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கும் அம்மா தேவை. நான் வீட்டில் அம்மாவாக இருப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன். நான் கர்ப்பமாக இருக்கும்பொழுது கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி கடவுள் பெயர்தான் வைப்பேன் என்று வேண்டியிருந்தேன். அதனால் கிருஷ்ணா.. கியான்.. என வைத்துள்ளேன். இரண்டுமே கிருஷ்ணரின் பெயர்தான்” என தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow