இந்தியா

வரதட்சணை கொலை வழக்கு: பிளாக் கேட் கமாண்டோவிற்கு சலுகை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

By VASUKI
25 Jun 2025, 02:16 AM
வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
'நேஷனல் செக்யூரிட்டி கார்டு' (NSG) பிளாக் கேட் கமாண்டோவாக பணியாற்றிய ஒருவர், தனது மனைவியை வரதட்சணை வழக்கில் மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என கூறி, அவரது சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுத்தாக்கலில், அவர் ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர், நாட்டுக்காக பல்வேறு சாகச பணிகளை மேற்கொண்டவர்’ என வாதிடப்பட்டது.

ஆனால், இந்த வாதங்களை திட்டவட்டமாக நிராகரித்த உச்சநீதிமன்றம், “தேசிய சேவையை மேற்கொண்டதற்காக ஒருவரை, தங்களது சொந்த குடும்பத்தில் நடத்தும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க முடியாது” எனக் குறிப்பிட்டது.

முக்கியமாக, அவர் NSG-யில் இருந்தது ஒரு பெருமை தான், ஆனால் அதனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த அநீதிக்கு நிவாரணம் அளிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தின் கீழ்மட்ட நிலைகளில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் செய்தியுடன் வந்த மனுவை நிராகரித்து, அவருக்கு எந்தவிதமான தண்டனைத் தளர்வும் வழங்க முடியாது என தீர்ப்பளித்தனர்.

வரதட்சணை வழக்கில் மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பிளாக் கேட் கமாண்டோவுக்கு நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த இந்த தீர்ப்பு, நாட்டுக்காக சேவை செய்யும் வீரர்களுக்கு மரியாதையுடன் இருப்பதை ஒத்துக்கொள்வதோடு, சட்டத்திற்கும் நீதிக்கும் சமத்துவம் உள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.