கேரளாவில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது.. கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்.. நீதிபதி சொன்னது என்ன?

Mr Vijayabhaskar Arrested in Kerala : எஸ்பி ஸ்ரீதேவி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் எம்.ஆர். விஜயபாஸ்கரை கரூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதன்பிறகு அவரை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

Jul 17, 2024 - 07:01
Jul 18, 2024 - 10:22
 0
கேரளாவில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது.. கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்.. நீதிபதி சொன்னது என்ன?
Mr Vijayabhaskar Arrested in Kerala

Mr Vijayabhaskar Arrested in Kerala : கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் மற்றும் அதே மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  கரூர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தனர். 

கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த  பிரகாஷ்,'' தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர்'' என்று கூறியிருந்தார்.

இதேபோல் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர், ''போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கரூர் நகர போலீசில் புகார் கொடுத்திருந்தார். 

இந்த புகார்களின் பேரில் வாங்கல் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் எனக்கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் 2க்கும் மேற்பட்ட முறை மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்பிறகு கைது செய்யப்படுவதை தவிர்க்க எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவானார்.

சிபிசிஐடி போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். எம்.ஆர். விஜயபாஸ்கரின் செல்போன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவரை பிடிக்க போலீசாருக்கு கடும் சவால் இருந்தது. இந்நிலையில், கேரள மாநிலம் திரிச்சூரில் தலைமறைவாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக, எம்.ஆர். விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வந்தனர். ஆனால் முன்னாள் அமைச்சர் கேரள எல்லையில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 

எம்.ஆர். விஜயபாஸ்கர் செல்போன் எண்கள் அனைத்தும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவர் வேறு ஒரு எண்ணில் ஆன்லைன் மூலமாக பேசி வந்தததை போலீசார் கண்டுபிடித்தனர். இதற்கிடையே அவர் உறவினருக்கு ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது , அந்த நெட்வொர்க்கை வைத்து திரிச்சூரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருக்கும் இடம் அறிந்து அங்கு சென்று  சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து எஸ்பி ஸ்ரீதேவி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் அவரை கரூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதன்பிறகு போலீசார் எம்.ஆர். விஜயபாஸ்கரை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வரும் 31ம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow