குற்றச்சாட்டில் சிக்கிய நிவின் பாலி..! ஹேமா கமிட்டியால் கிழியும் முகத்திரைகள்...

மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தததாக, நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sep 4, 2024 - 20:14
 0

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் மிகுந்த பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2017ஆம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டனா். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதனையடுத்து முறையாக ஆய்வு செய்த ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்றை சமர்பித்தது.

கேரளா சினிமா துறையில் சில கிரிமினல்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்காக இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் நடிகைகளை அட்ஜெஸ்மெண்ட் செய்ய வலியுறுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நடிகைகளுக்கு சம ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும், அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி கூட நடிகைகளுக்கு இல்லை என்றெல்லாம் ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலையாள திரையிலகில் முன்னணி நடிகர்கள் பலரும் பாலியல் புகாரில் சிக்கியுள்ள நிலையில், தமிழில் நேரம் திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகர் நிவின் பாலியும் தற்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி நேரியமங்கலத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் புகார் கூறியுள்ளார். இது குறித்து, எர்ணாகுளம் பகுதியில் உள்ள, ஒன்னுக்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், நிவின் பாலி ஆறாவது குற்றவாளியாகவும், தயாரிப்பாளர் ஏ.கே.சுனில் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற நான்கு பேரில் ஸ்ரேயா என்ற பெண்ணும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

திரைப்பட விவாதத்திற்காக, ஸ்ரேயா துபாய்க்கு அழைத்ததாகவும், அங்கு வைத்து, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட நடிகை தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதில் முதல் குற்றவாளியாக ஸ்ரேயா சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் நிவின் பாலி, “நான் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு தவறான செய்தியை பார்க்க முடிந்தது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் உறுதியாக இருக்கிறேன்.

மேலும், சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும். உங்கள் அக்கறைக்கு நன்றி. மீதமுள்ளவை சட்டப்படி கையாளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow