பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா.. ரயில் டிக்கெட் ரிசர்வேசன் எப்போது தெரியுமா?

2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Sep 9, 2024 - 20:02
Sep 10, 2024 - 10:14
 0
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா.. ரயில் டிக்கெட் ரிசர்வேசன் எப்போது தெரியுமா?
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிப்பு

தமிழர்கள் தங்களது கலாச்சார, பண்பாட்டு விழாவாக. பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். தமிழர்களின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்து நன்றி தெரிவிக்கும் விழாவாக உற்சாகமாக கொண்டாடுகின்றனர். அறுவடை திருநாளாம் பொங்கல் திருநாள் அன்று உழவர்கள் தமது உழைப்பிற்கும், தங்களுக்கு உதவிய இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து பல லட்சம் மக்கள் பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். அதிலும் தங்களது சொந்த வாகனங்களிலும் அரசு பேருந்து தனியார் பேருந்துகளிலும் மற்றும் ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

ஆனாலும், பொதுமக்கள் தங்களது பயணத்தை முறையாக, திட்டமிட்டால் ஒழிய, இனிமையாக அமையவேண்டிய பயணம், கொடூரப் பயணமாக மாறிவிடுகிறது. குடும்பத்தினருடன் செல்வோர்கள், குறிப்பாக குழந்தைகளுடன் செல்வோர்கள் முறையாக திட்டமிடததால், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடைசி நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு செல்லவேண்டி உள்ளது.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி 13, 14, 15 ஆகிய தேதிகளின் கொண்டாடப்பட உள்ளது. இதனையத்து, பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து ரயில்கள் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் வரும் 12ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஜனவரி 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் வருகின்ற 12ஆம் தேதி முன்பதிவு செய்யலாம் எனவும், ஜனவரி 11ஆம் தேதி சொந்த ஊர் செல்ல திட்டமிடுபவர்கள் வருகின்ற 13ஆம் தேதி முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், ஜனவரி 12ஆம் தேதி செல்ல விரும்புபவர்கள் வருகின்ற 14ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் எனவும், ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வருகின்ற 15ஆம் தேதி முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் எனவும், பொங்கல் பண்டிகை அன்று பயணம் செய்யோர் செப்டம்பர் 16ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow