சொற்பொழிவு மூலம் மகா விஷ்ணுவுக்கு பணம்.. வெளிநாட்டு பரிவர்த்தனை குறித்து விசாரணை

சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம், வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Sep 12, 2024 - 09:15
Sep 12, 2024 - 09:25
 0
சொற்பொழிவு மூலம் மகா விஷ்ணுவுக்கு பணம்.. வெளிநாட்டு பரிவர்த்தனை குறித்து விசாரணை
மகா விஷ்ணுவின் வெளிநாட்டு பரிவர்த்தனை குறித்து விசாரணை

சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்ஜென்மம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அப்போது, முன் ஜென்மத்தில் தவறுகள், பாவங்கள் செய்ததால் தான் இப்போது மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார்.

அப்போது அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர், மகா விஷ்ணுவின் கருத்து தவறு என எதிர்ப்புத் தெரிவித்தார். அதனையடுத்து மகா விஷ்ணுவுக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மகா விஷ்ணுவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மகாவிஷ்ணு கடந்த 8ஆம் தேதி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, மகா விஷ்ணு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக, மகா விஷ்ணு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றார். மேலும், காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்த நிலையில், மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

மகா விஷ்ணு பேசிய பெண்கள் குறித்து இழிவாகவும், ஆபாசமாகவும் பேசிய வீடியோக்கள் வைரலாகி உள்ளது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள சொற்பொழிவாளர் மகா விஷ்ணுவிடம், சைதாப்பேட்டை போலீசார் நேற்றிரவு விடிய விடிய கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சொற்பொழிவு மூலம் சம்பாதிக்கும் பணம் குறித்தும், வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மகா விஷ்ணுவை போலீசார் திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow