இவரை தெரியவில்லையா?.. பழைய போஸ்டுகளை கிளரும் ரஞ்சித்திஸ்ட்டுகள்... சேகர்பாபுக்கு எதிர்வினை

Minister Sekar Babu on Pa Ranjith : அமைச்சர் சேகர் பாபு இயக்குநர் பா.ரஞ்சித் குறித்த கேள்விக்கு, அவர் யார் என்று தெரியாது என பதிலளித்ததற்கு ரஞ்சித் ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

Jul 23, 2024 - 06:58
Jul 23, 2024 - 11:02
 0
இவரை தெரியவில்லையா?.. பழைய போஸ்டுகளை கிளரும் ரஞ்சித்திஸ்ட்டுகள்... சேகர்பாபுக்கு எதிர்வினை
அமைச்சர் சேகர்பாபுவுக்கு ரஞ்சித் ஆதரவாளர்கள் பதிலடி

Minister Sekar Babu on Pa Ranjith : பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்(Armstrong) கடந்த 5ஆம் தேதி, 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தன.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக போலீசார் இதுவரை 16க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். மேலும் அவரின் கொலை குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் படுகொலை (Armstrong Murder) தொடர்பாக இயக்குனர் பா ரஞ்சித் (Director Pa Ranjith) பல்வேறு கேள்விகளை முன் வைத்திருந்தார். இதுதொடர்பான தனது ட்விட்டர் பதிவில், “சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?

சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது திமுக மற்றும் திமுக அமைச்சர்களை கடுமையாக சாடி பேசினார் பா ரஞ்சித், “சென்னையில் ஒரு மேயர் இருக்கின்றார். பிரியா நீங்கள் திமுகவில் இருப்பதால் மேயர் இல்லை. ரிசர்வேஷன் தொகுதி இருந்ததால்தான் நீங்கள் இன்றைக்கு மேயர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்ககூடிய கயல்விழி செல்வராஜ், ஆம்ஸ்ட்ராங் இறந்ததற்கு வந்து பார்க்ககூட இல்லை. சமூகநீதி குறித்து பேசும் திமுக அரசு சென்னையைக் கட்டி ஆண்ட தலைவருக்கு சென்னைக்கு வெளியே புதைக்க இடம் கொடுக்கீன்றீர்கள். இதுதான் உங்களின் சமூக நீதியா?” என்றும் பேசியிருந்தார்.

இந்த நிலையில் நான் பா. ரஞ்சித் கருத்துக்கு திமுக பிரபலங்கள் சிலர் பதிலடி கொடுத்து வருகிற நிலையில் அமைச்சர் சேகர்பாபுவிடம் (Sekar Babu) இயக்குனர் பா ரஞ்சித் திமுகவை விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் சேகர்பாபு பா.ரஞ்சித் யார் (Who is Pa Ranjith) என்று எனக்கு தெரியாது அவர், அரசியல்வாதியாக இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கும் என்று கூறினார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2018ஆம் ஆண்டு கருணாநிதியின் நினைவினை போற்றும் விதமாக, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், இயக்குநர் ரஞ்சித், நடிகர் தியாகராஜன், நடிகர் பொன்வண்ணன, கவிஞர் பா.விஜய், இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் கரு.பழனியப்பன், நடிகர் பசுபதி, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சிறப்பிக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்பான, கடந்தகால பதிவுகளை எடுத்துக் காண்பித்து எங்களை இன்னுமா தெரியவில்லை? என்று பா ரஞ்சித் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவாதங்களை இணையதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow