போராடி தோற்ற இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், மகேஸ்வரி சவுகான், அனந்த் ஜீத் சிங்

பாரிஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், மற்றும் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மகேஸ்வரி சவுகான், அனந்த்ஜித் சிங் இணை தோல்வியை தழுவின.

Aug 5, 2024 - 21:11
Aug 6, 2024 - 10:07
 0
போராடி தோற்ற இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், மகேஸ்வரி சவுகான், அனந்த் ஜீத் சிங்
மகேஸ்வரி சவுகான், அனந்த் ஜீத் சிங் மற்றும் லக்‌ஷயா சென்

Indian in Paris Olympics 2024 : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். அதேபோல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர்களுக்கான போட்டியில், மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை மூன்றாக உயர்ந்தது.

10ஆவது நாளான இன்று நடைபெற்ற பேட்மிண்டன் தொடரின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் மற்றும் மலேசியாவின் ஸீ ஜியா லீ ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் வென்றார்.

தொடர்ந்து இரண்டாவது செட்டில், 12-12 என்று சமநிலையில் ஆடிக்கொண்டிருந்த சென், பிற்பகுதியில் பின்தங்கினார். இதனால், 16-21 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை இழந்தார். இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில், 11-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். மலேசியாவின் ஸீ ஜியா லீ வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதல் போட்டியில், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் மகேஸ்வரி சவுகான் மற்றும் அனந்த்ஜித் சிங் இணை நான்காவது இடம் பிடித்தனர். சீனா இணையுடனான இந்த போட்டியில், மூன்று சுற்றுகள் முடிவில் இரு அணிகளும் 146 புள்ளிகள் பெற்று சமனில் இருந்தன.

இதனையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் ஷூட் அவுட் போட்டியில் சீனா இணை 4 புள்ளிகள் பெற்ற நிலையில், இந்திய இணை 3 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் பதக்க வாய்ப்பை இழந்தன. இத்தாலி நாட்டு இணை 149 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், அமெரிக்கா இணை 148 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow