Free Medical Services in Wayanad : இலவச மருத்துவ சேவை... அதிரடியாக அறிவித்த பிரபல மருத்துவமனை

Free Medical Services in Wayanad Hospital : வயநாடு நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எந்த கட்டணம் செலுத்த தேவையில்லை என்று கோழிக்கோட்டில் உள்ள பிரபல மருத்துவமனை அறிவித்துள்ளது.

Aug 1, 2024 - 13:47
Aug 2, 2024 - 10:20
 0
Free Medical Services in Wayanad : இலவச மருத்துவ சேவை... அதிரடியாக அறிவித்த பிரபல மருத்துவமனை
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சிகிச்சை என மருத்துவமனை அறிவிப்பு

Free Medical Services in Wayanad Hospital : கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிய கனமழை காரணமாக வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடியிருப்புகள், அங்கு இருந்த பள்ளிகள் என அனைத்தும் மண்ணுக்குள் புதையுண்டன. 

வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே மண்ணில் புதையுண்டும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 256 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. அங்கு தோண்டத் தோண்ட உடல்கள் வெளியே வந்தவண்ணம் உள்ளன. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரம் வரை உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்ததால் அந்த பகுதி முழுவதும் மக்களின் அழகுரல்களால் மயானமாக உள்ளது. வயநாடு நிலச்சரிவு (Wayanad Landslide) காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ள, நிதியுதவி தந்து உதவுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

2-ம் நாளாக நேற்றும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, மண்ணில் புதைந்து உயிரிழந்த நிலையில் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைத்தனர். சூரல்மலை, முண்டக்கை பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே ஏராளமானோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், முண்டக்கை பகுதியை சேர்ந்த 225 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. அவர்கள் மண்ணில் புதையுண்டனரா, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனரா என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பி.வி.எஸ். சன்ரைஸ் என்ற மருத்துவமனை அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், “வயநாட்டில் உள்ள நம்முடைய மக்கள், சமீபத்திய நிலச்சரிவால் பாதிப்படைந்துள்ளது மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது.

இந்த சவாலான நேரத்தில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கட்டணமில்லை சேவை மூலம் இலவச மருத்துவ சிகிச்சையை வழங்க விரும்புகிறோம். இதில் பயனடைய விரும்புவர்கள், குறிப்பிட்ட நபரை அடையாளம் காண்பதற்காக, ஏதேனும் ஒரு, அரசு அதிகாரியிடமிருந்தும் உறுதிப்படுத்தல் கடிதம் கொண்டுவர வேண்டும். இந்த வசதிகளை பெறுவதற்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளனர்.

மேலதிக விவரங்களை தெரிந்துகொள்ள +91 9778689173 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow