தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு!

By Christon
25 Apr 2026, 10:08 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.
வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.480 சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,800-க்கு விற்பனையானது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் நேற்று அதிரடியாகச் சரிந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ஒரே நாளில் ரூ.5,000 குறைந்து, ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து, ரூ.265-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலைக்கு கிராம் ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.