தமிழ்நாடு

பெண்கள் பாதுகாப்பு: சட்டப்பேரவையில் பாஜக-திமுக இடையே காரசார விவாதம்

By Jayakumar
28 Apr 2025, 01:27 PM
பெண்கள் பாதுகாப்பு, சட்டப்பேரவை, பாஜக, அதிமுக, திமுக, தமிழக அரசு, Women's safety, Legislative Assembly, BJP, AIADMK, DMK, Tamil Nadu government
பாஜக, திமுக காரசார விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.இதைத்தொடர்ந்து கேள்வி நேரத்தின்போது, பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது குற்றம்சாட்டினார்.

இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் உள்ள மக்கள் அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருந்து வருகின்றனர் என பதில் அளித்தார். மேலும் வானதி சீனிவாசன் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது புகார் கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.

தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா?

உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் 23 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஆந்திரா, வாரணாசிக்கு ஒரு நீதி? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா?
மேலும், ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கி சென்று விட்டான். நல்லவர்கள், கெட்டவர்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மேல் அரசு நடவடிக்கை எடுக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என பதில் அளித்தார். இதனால் அதிருப்தி அடைந்த பாஜக எம்.எல்.ஏக்கள் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக குரல் எழுபினர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.