இந்தியா

திருமண விழாவில் சோஃபா கவரால் மோதல்; தொழிலாளி நேர்ந்த கொடூரம்!

By Christon
28 Nov 2025, 05:05 PM
உத்தரப் பிரதேசதில் இருக்கைகள் மற்றும் சோஃபாக்களில் பயன்படுத்தப்பட்ட கவர்களின் நிறம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், திருமண விழா ஒன்றில் இருக்கைகள் மற்றும் சோஃபாக்களில் பயன்படுத்தப்பட்ட கவர்களின் நிறம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 45 வயது கூடாரம் அமைக்கும் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல் கண்டெடுப்பும் வழக்குப் பதிவும்

பார்சியா கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சிங் என்பவர், தனது மருமகனும் கூடார வியாபாரியுமான அஜித் குமார் சிங் (45), நவம்பர் 23 அன்று அதிகாலை மஜ்ஹௌவா கிராமத்தில் இருந்து வீட்டிற்குப் புறப்பட்ட பின், வீடு திரும்பவில்லை என காவல்துறையிடம் புகார் அளித்தார். ஹல்தி காவல் நிலையத்தில் காணாமல் போனவர் குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, கடந்த 25-ம் தேதி அன்று, கங்கா நதியில் ஹுகும் சப்ரா படித்துறை அருகே, மோட்டார் சைக்கிளுடன் கட்டப்பட்ட நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல் அஜித் குமார் சிங் என அடையாளம் காணப்பட்டது.

உயிரிழந்தவரின் சகோதரர் சந்தன் குமார் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், பியூஷ் குமார் சிங் (43), அனிஷ் குமார் சிங் (24) மற்றும் அங்கூர் சிங் (22) ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கொலைக்கான காரணம் மற்றும் கைது

முதல் தகவல் அறிக்கையின்படி, கடந்த 22-ம் தேதி அன்று மஜ்ஹௌவா கிராமத்தில் நடந்த திருமண விழாவுக்கு அஜித் கூடாரம் அமைத்துக் கொடுத்திருந்தார். அங்கு நள்ளிரவு 1 மணியளவில், இருக்கைகள் மற்றும் சோஃபாக்களின் கவர்களின் நிறத்தை மாற்றுவது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தக் தகராற்றைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அஜித்தைக் கொலை செய்து, அவரது மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து உடலை கங்கா நதியில் வீசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நேற்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.