TNPSC குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் - வெளியானது முக்கிய தகவல்

TNPSC குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Sep 4, 2024 - 08:00
Sep 4, 2024 - 12:40
 0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதினர். 7 ஆயிரத்து 247 தேர்வு மையங்களில் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. குறிப்பாக சென்னையில் மட்டும் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதினர். இந்நிலையில் TNPSC குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow