#BREAKING கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் - மேலும் 3 பேர் மீது குண்டாஸ் | Kumudam News 24x7

#BREAKING கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் - மேலும் 3 பேர் மீது குண்டாஸ் | Kumudam News 24x7

Aug 30, 2024 - 09:07
Aug 30, 2024 - 16:47
 0

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, தாமோதரன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow