பிரம்மாண்டமாக நடைபெற்ற திமுக பவள விழா – பங்கேற்ற தலைவர்கள்
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற திமுக பவளவிழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ. அன்பரசன், உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோ, கி.வீரமணி, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
What's Your Reaction?