அரசு பள்ளிகளில் சர்ச்சை பேச்சு.. சென்னை விமான நிலையத்தில் மகா விஷ்ணு கைது

அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்தனர்.

Sep 7, 2024 - 15:49
 0

சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணு பாவ புண்ணியங்கள் குறித்தும், மறுபிறவி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரது கருத்துக்கு பள்ளியில் பணிபுரியும் மாற்று திறனாளி ஆசிரியரான சங்கர் என்பவர் கண்டனம் தெரிவித்தார். அப்போது மகாவிஷ்ணுவுக்கும் ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. 

மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்று திறனாளிகள் சங்கத்தினர் சென்னை சைதாப்பேட்டை மற்றும் திருவெற்றியூர் காவல் நிலையங்களில் மகாவிஷ்ணுவுக்கு எதிராக புகார் அளித்திருந்தனர். 

இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றிருந்த மகாவிஷ்ணு இன்று சென்னை திரும்ப உள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து சமூக வலைதளத்தில் மகாவிஷ்ணு பேச்சுக்கு எதிர்மறையான கருத்துகள் பதிவோர் அதிகமாக உள்ளதால் அவருக்கு பாதுகாப்பு வழங்கி பத்திரமாக விசாரணைக்கு அழைத்து செல்ல 200 காவலர்கள் குவிப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் மற்றும் சைதாப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow