அண்ணாமலைக்கு ஒரே முதலீடு அவரது வாய் தான்! - இபிஎஸ் விமர்சனம்
அண்ணாமலைக்கு ஒரே முதலீடு அவரது வாய் தான்! - இபிஎஸ் விமர்சனம்
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 25) செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலைக்கு மைக்கை பார்த்தாலே பேட்டி கொடுக்கும் வியாதி இருக்கிறது. எலாருமே உழைத்து தலைவர் ஆனார்கள். ஆனால் உழைக்காமலே ஒரு கட்சிக்கு தலைவர் ஆனவர் அண்ணாமலைதான். பாஜகவுக்காத இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார்? எதோ ஒரு வழியில் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டு அதை வைத்துக்கொண்டு இன்று தலை கால் புரியாமல் ஆடுகிறார். நாங்கள் எல்லாம் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் இந்த கட்சிக்குள் வந்து உழைத்து இந்த இடத்தில் இருக்கிறோம். 52 ஆண்டு காலம் உழைப்புக்கு பிறகுதான் அதிமுகவின் பொதுச்செயலாளராக ஆகி இருக்கிறேன். மக்களைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு தலைவர் என்றால் அது அண்ணாமலைதான். அவருக்கு ஒரே முதலீடு அவரது வாய் தான்” என விமர்சித்துள்ளார்.
What's Your Reaction?