வீடியோ ஸ்டோரி

”ஏய்..அவன வெளியே தூக்கிட்டு போயா” காரைக்குடி மாநகராட்சியில் மேயரின் ஆணவக் குரல்!

By leninakathiya
12 Oct 2024, 12:36 AM
மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் கவுன்சிலர்களையும், பத்திரிகையாளர்களை தாக்கி மாமன்றத்தில் மேயரே பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சியாக மாறிய காரைக்குடி நகராட்சியில், நடைபெற்ற முதல் மாமன்றக்கூட்டமே அதகளப்பட்டு போயிருக்கிறது. அதிமுக உறுப்பினரை ஒருமையில் பேசியதோடு, செய்தியாளர்கள் மீதும் மேயர் பாய்ந்திருப்பது, இவர்தான் திராவிட மாடலின் சமூகநீதி மேயரா என்னும் கேள்வியை எழுப்பி இருக்கிறது.