உலகம்

நேபாளை சூறையாடிய பெருவெள்ளம்.. பல்லாயிரம் கோடி இழப்பு!

By Christon
04 Sep 2026, 05:07 PM
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், பல்லாயிரம் மதிப்பிலான வீடுகள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பேரிடரால், குறைந்தது ரூ.24,187.59 கோடி மதிப்பிலான வீடுகள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் திடீரெனப் பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் திரிசூலி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரம் அமைந்திருந்த ஏராளமான கிராமங்களையும் நகரங்களையும் வெள்ளம் அடித்துச் சென்றது.

இந்த கொடூரப் பேரிடரில் சிக்கி இதுவரை 1,290-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் வாழ்விடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

வெள்ள பாதிப்புகள் குறித்துப் பேசிய அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தர்ம ராஜ் உப்ரேதி, குறைந்தபட்சம் 7,500 வீடுகள் வெள்ளத்தில் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது சுமார் 20,000 வீடுகளை புதிதாகக் கட்ட வேண்டிய கட்டாயச் சூழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சொத்து இழப்புகளைத் தவிர்த்து, சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல், தற்காலிக முகாம்கள் அமைத்தல், குடிநீர் மற்றும் மின்சார விநியோகத்தைச் சீரமைத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய மீட்புக் கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் அடுத்த 4 மாதங்களில் ரூ.497 கோடி (இந்திய மதிப்பில்) செலவாகும் என நேபாள அரசு கணக்கிட்டுள்ளது.